bluehost

Saturday, February 29, 2020

Daily Mystic Quote - Feb 29, 2020

The best thing you can do for your family, your children, society, and the world around you is to enhance yourself.

Quotes Inspirational - Sadhguru looks at how we can take charge of how we experience our life and “Inner Engineer” ourselves.

Friday, February 28, 2020

வன்முறையின் நிறம்

தீவிர‌வாத‌த்தின் நிறம்
காவியா?
ப‌ச்சையா?
தெரிய‌வில்லை.
ஆனால்,
அப்பாவி மக்க‌ள்
சிந்தும் இர‌த்த‌த்தின்
நிறம்
சிவ‌ப்பு!!!
WEDNESDAY, DECEMBER 3, 2008
இந்த கவிதையை(கவிதையா எனத் தெரியவில்லை) 12 ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய வலைப்பூவில், எழுதியிருக்கிறேன். ஆனால், அது தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவது வேதனையளிக்கிறது.
அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் போன்றவற்றின் பெரும் வளர்ச்சி, மனித இனத்தை உயர்த்தும் என நினைத்தேன். ஆனால், சக மனிதனை ஜாதி, மதம், இனம் மற்றும் மொழியின் பெயரால் கொல்லும் இழிவு இன்றும் தொடர்கிறது. நம்மை நாகரீகம் வளர்ந்த சமுதாயம் என சொல்லிக் கொள்வது வெட்கக்கேடு.
அமைதியான மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடும் இளைஞனின் படத்தை பார்த்தேன். இந்தி திரைப்பட கதாநாயகனை மிஞ்சிய வசீகரமானத் தோற்றம். அவன் கொலை செய்தான் என்று யாராவது சொன்னால் - சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். அவ்விளைஞனின் மனதில் நஞ்சை கலந்தது யார்? சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தீவிரவாதத்திற்கு வறுமை, போதிய கல்வியறிவின்மை போன்ற காரணிகள் இருந்தன. ஆனால், இன்று நன்கு படித்த, பணக்கார இளைஞர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். காரணம்,
சமூக வலைதளங்கள் உட்பட எங்கும், நரகலாய் வழியும் "வெறுப்பு பிரச்சாரம்". நன்கு படித்து உயர் பதவிகளில் இருப்பவர்களின் மனங்களில் கூட, இந்த மனநிலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையையும் அடைந்தேன்.
இன்று, மக்களை வழிநடத்த காந்தி இல்லை. ஆனால், கோட்சேக்கள் நிறைய இருக்கின்றனர்.
சமூக ஆர்வலர்
சு.இரவிச்சந்திரன்

Daily Mystic Quote - Feb 28, 2020

Passion is focused on one thing – therefore it burns out at some point. Compassion is all-inclusive – it has so much fuel to burn that it does not die out.

Quotes Inspirational - Compassion is not that which is bereft of passion, it's a larger dimension of passion.

Thursday, February 27, 2020

Daily Mystic Quote - Feb 27, 2020

The external dimensions of life can bring you comfort and convenience. Only the inner dimension can bring fulfillment.
Quotes about Life - When you do inner action, it does not involve the body and the mind because both the body and the mind are still external to you.

Wednesday, February 26, 2020

ரமண மகரிஷி - பாலகுமாரன்


Image may contain: 2 people, drawing, possible text that says 'ஸ்ரீரமண மகரிஷி பாலகுமாரன்'

சிறுவன் வேங்கடராமன் குடும்பத்தை விட்டு பிரிந்து, ஞானத்தை தேடி, திருவண்ணாமலைக்கு வந்தான். அங்கு தங்கி பல ஆண்டுகள் தவம் புரிந்தான். காலங்கள் ஓடின. வேங்கடராமன் - இரமண மகரிஷி ஆனார். அவருடைய குடும்பத்தினர் செய்தி அறிந்து அவரை காண வந்தனர். கணவனை இழந்த அவர் தாய், தன் மகன் சந்நியாசியாக மாறிவிட்டதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டார். சம்சாரியை, மனைவி பார்த்துக் கொள்வாள். ஆனால், சந்நியாசியான தன் மகனை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று அவருடனே தங்கியிருக்க விரும்பினார்.
முற்றும் துறந்த ஞானிகளால் கூட, தாயன்பை துறக்க இயலவில்லை. இரமண மகரிஷியும் அதற்கு விலக்கல்ல. அப்படி அவர் துறந்திருந்தால் அவர் ஞானியும் அல்ல. இரமணரும் தன் தாய், தன்னுடன் இருக்க இசைந்தார். பகல் பொழுது, தன் மகனுடன் இருந்து பணிவிடைகள் செய்துவிட்டு, மாலையில் மலையைவிட்டு இறங்கி, ஊரில் தங்கிக் கொள்வார். ஆனால் நாளாக நாளாக வயதின் முதிர்வால், அவரால் மலை ஏறி, இறங்க முடியவில்லை. அதனால், இரமணரிடம் கேட்டு, ஆசிரமத்திலேயே தங்கி விடுகிறார். இது அங்கு இருக்கும் சிலருக்கு பிடிக்கவில்லை. பொம்மனாட்டிகள் ஆசிரமத்தில் தங்கினால், ஆச்சாரம் கெட்டுவிடுமே என சஞ்சலமடைந்தனர். (சிறு வயதில், என் ஆத்தாவிடம்- என் அம்மாவின் அம்மா- கதைக் கேட்கும் போது அவர் பெண்களை "பொம்மனாட்டிகள்" என்றுதான் குறிப்பிடுவார். காரணம், அந்த காலத்தில் பெண்களை - பொம்மைகள் போன்று ஆட்டிப்படைப்பார்களாம். அதனால்தான் "பொம்மனாட்டிகள்")
அவர்கள் இரமணரை அணுகி, "ஆசிரமத்தில் பொம்மனாட்டிகள் தங்க கூடாது என்பது விதி. ஆச்சாரம் கெட்டுவிடும். உங்கள் அம்மா இங்கே இருக்கக்கூடாது" என வலியுறுத்தினர்.
மகான் "அப்படியா?" எனக் கேட்டுக்கொண்டார். பிறகு, எழுந்து சென்று, தனது வயதான தாயின் கையைப் பற்றி, "வாம்மா! போகலாம்" என்று ஆசிரமத்தை விட்டு வெளியேறி, மலையில் கீழே இறக்கிச் சென்றார்.
ஆச்சாரவாதிகள், இரமணரின் இந்த செய்கையை எதிர்ப்பார்க்கவில்லை. மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தெய்வம் வெளியேறி விட்டால், கோவிலுக்கு என்ன மதிப்பு? தங்கள் தவறினை அறிந்து, ஓடிச்சென்று மகானிடம் மன்னிப்பு கோரினர். அவர் தன் தாயுடன் வந்து தங்குமாறு வேண்டினர். இரமணர் தன் தாயுடன் ஆசிரமத்திற்கு திரும்பினார். ஞானிகளை, இவ்வுலகின் சிறுமைகள் தீண்டுவதில்லை.
இத்துடன் இப்பதிவை முடித்துவிட நினைத்தேன். ஆனால், அம்மாவின் கையைப் பற்றி அழைத்து செல்லும் இளைஞனின் சித்திரம், என்னை அதிகம் பாதித்தது. என் அம்மா ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் பணிபுரிந்த பள்ளியில் ஐந்தாவது வரை படித்தேன். என் அம்மாவுடன்தான் பள்ளிக்கு போவேன். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவரின் வேகநடைக்கு சமமாக ஓடுவேன். சாலையைக் கடக்கும் போது என் அம்மாவின் கை, என் கையை இறுகப் பற்றிக் கொள்ளும். பாதுகாப்பாக, மறுப்புறம் அழைத்து செல்வார். காலம் ஓடியது. சிறுவன் இளைஞன் ஆனான். ஒரு முறை ஊருக்கு போவதற்காக என் அம்மாவுடன் சென்ட்ரல் ரயில் நிலையம், போனேன். மதிய நேரம். வாகனங்கள் சீறிப்பறக்கும் வால்டாக்ஸ் சாலையைக் கடப்பதற்காக, ஓரமாக நின்றிருந்தோம். வாகனங்கள் ஓய்ந்து, சாலையைக் கடக்க யத்தனிக்கும்போது, தீடீரென என் அம்மாவின் கை, சிறு நடுக்கத்துடன் என் கையைப் பற்றியது. என் அம்மாவை கரம் பற்றி பத்திரமாக அழைத்து சென்றேன். காலம் மாயாஜாலம் புரிந்தது. சிறுவன் இளைஞனாகவும், அம்மா சிறுமியாகவும் மாறிப்போனர்கள். என் அம்மாவின் கையைத் தொட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதை, அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ரயிலில் ஏறி, இருக்கையில் அமரும் வரை, என் அம்மாவின் கரத்தைப் பற்றிக் கொண்டிருந்தேன்.
சு.இரவிச்சந்திரன்

நானும், பா.ஜ.க.வும்

இந்த தலைப்பு என் நண்பர்களுக்கு வியப்பை தரலாம். ஆனால், நேற்று ஃபேஸ்புக்கில் கண்ட பதிவு ஒன்று என்னை இந்த பதிவினை எழுத தூண்டியது. "நீ உண்மையான இந்து என்றால், பா.ஜ.க.வுக்குதான் வாக்களிக்க வேண்டும். இல்லை என்றால் நீ இந்துவும் கிடையாது. இந்தியனும் கிடையாது" என்பதுதான் அப்பதிவு. "இது என்னடா புதுசா இருக்கு" என்று வடிவேலு பாணியில் யோசிக்க ஆரம்பித்தேன்.
இவர்களுக்கு பா.ஜ.க.வின் வரலாறு தெரியுமா? அந்த கட்சி, நாற்பது ஆண்டுகளுக்கு முன்புதான்,(1980) தொடங்கப்பட்டது. அதற்கு முன் வாக்களித்த இவர்களின் பெற்றோர்கள், இந்துக்கள் இல்லையா? ஆன்டி இண்டியன்களா? இந்துக்கள் இல்லாத பெற்றோர்களுக்கு பிறந்த, இவர்கள் மட்டும் எப்படி இந்துக்கள் ஆனார்கள்? இவர்களுக்கு ப.ஜா.க. அறிமுகம் ஆனது அண்மையில்- மோடியின் காலத்தில்தான். ஆனால் எனக்கு 1989ஆம் ஆண்டில், நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது.
1984ஆல், இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புடன் பிரதமரான இராஜிவ் காந்தி, தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியின் முடிவில் மக்களிடையே செல்வாக்கு இழந்து இருந்தார். இளைஞர், இந்தி திரைப்பட நாயகர்களுக்கு இணையான வசீகர தோற்றம், மென்மையான குணம், மேன்னாட்டு கல்வி கற்றவர், நாட்டின் இளைய பிரதமர். அவர் பதவி ஏற்கும் போது "நான் ஒரு இளைஞன். எனக்கு கனவு காணும் உரிமை உண்டு" என்று கூறினார். ஆனால், எல்லாக் கனவுகளும் நிறைவேறுவது இல்லை. கனவுக் கண்டவரை, அக்கனவுகளே பலிக்கொண்டது - ஒரு வரலாற்று சோகம்.
பெரும் எதிர்பார்ப்புடன் நிறைவேற்றப்பட்ட பஞ்சாப் ஒப்பந்தம், காஷ்மீர் ஒப்பந்தம், இந்திய-இலங்கை உடன்படிக்கை ஆகியவை, சில மாதங்களிலேயே தோல்வி அடைந்ததன.
(அப்போது, பஞ்சாப் மாநிலத்தில், காஷ்மீர் போன்று, "காலிஸ்தான்" என்னும் தனிநாடுக் கேட்டு ஆயுத போராட்டம் நடைப்பெற்றது). அரசியல் அனுபவமற்ற இராஜீவ் காந்தி, தன் மூத்த சகாக்களால் தொடர்ந்து, தவறாக வழிநடத்தப்பட்டார். இறுதியாக அவருடைய ஆட்சிக்கு, பேரிடியாக "போபர்ஸ் பீரங்கி ஊழல்" அமைந்தது.
இராஜிவ் காந்தியின் அமைச்சரவையில், பாதுகாப்பு அமைச்சராக இருந்த வி.பி.சிங் இந்த முறைக்கேட்டை அம்பலப்படுத்தினார். நாடு முழுவதும் காங்கிரஸூக்கு எதிரான மனநிலை தோன்றியது. எதிர் கட்சிகள் இணைந்து, "தேசிய முன்னணி" என்ற கூட்டணியை உருவாக்கின. தமிழ் நாட்டில் தி.மு.க. அக்கூட்டணியில் இணைத்தது. அப்போது, தமிழ் நாட்டில் புதுவரவாக பா.ஜ.க. வந்தது.
முதன்முறையாக பிளாஸ்டிக் கொடிகளை அறிமுகப்படுத்திய பணக்கார கட்சி பா.ஜ.க.தான். அக்கட்சியின் வருகை, காங்கிரஸூக்கு மாற்றினை தேடியவர்களை வசீகரித்தது. என்னையும், நடராஜனையும் புதிதாக வந்த பா.ஜ.க. ஈர்த்தது. நான் அவனிடம் பா.ஜ.க. கொடி கிடைக்குமா? எனக்கேட்டேன். மறுநாள், அவனை பள்ளியில் சந்தித்தபோது, ஒரு புத்தகத்தினை எடுத்து, திறந்து அதன் நடுவில் மடித்து வைக்கப் பட்டிருந்த கொடியினை காட்டினான். இரண்டு அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்ட கொடியை, நான்காக மடித்து வைத்திருந்தான். ஒரு பொக்கிஷத்தைப் போல், மிகுந்த கவனத்துடன் அதை என்னிடம் தந்தான்.
அக்கொடியை, என் வீட்டு மாடியில் இருந்த மின் கம்பத்தில் கட்டினேன். எனது அப்பா, தி.மு.க. அபிமானி. ஆனால் perfect gentle man. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. "கொள்கை எல்லாம் உனக்குள் வைத்து கொள். வீட்டில் கட்சிக்கொடி பறக்கவிடாதே" என மென்மையாக அறிவுறுத்தினார். நான் கழற்றி விட்டேன்.
இன்று, "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வாசகம் அதிகம் விவாதத்துக்கு உள்ளானது. ஆனால், அந்த தாமரை சின்னத்திற்கே அப்போது பெரும் ஆபத்து வந்ததை, இன்றைய மோடி பக்தர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். தாமரை - இந்தியாவின் தேசிய மலர். ஆகையால், அதனை ஒரு கட்சியின் சின்னமாக வைக்கக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அதற்கு தீர்வு காணப்பட்டது.
1989ஆம் ஆண்டு, பாராளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வட இந்தியாவில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், தென்னிந்தியாவில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. வி.பி.சிங் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். கட்சிக்குள் அப்பவே உரசல். சமரசம் செய்து, தேவிலாலுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்றதும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து, அதகளம் செய்தார். வி.பி.சிங் நிச்சயமற்ற நிலையிலேயே ஆட்சியை தொடர்ந்தார்.
அப்போது, பா.ஜ.க. என்றால் எல்.கே.அத்வானிதான். மூத்த அரசியல்வாதி. மேடைகளில் ஆவேசமாக முழங்க கூடியவர். அவர் ராமஜென்ம பூமி பிரச்சினையை கையிலெடுத்தார். 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி, ரதயாத்திரையை தொடங்கினார். குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் ஆரம்பித்து, அயோத்தி நோக்கி ரதயாத்திரை சென்றது. இதனால், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பீகாரில் நுழைந்த அத்வானியை, அப்போதைய பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் கைது செய்தார். ரத யாத்திரை முடிவுக்கு வந்தது. ஆனால் பா.ஜ.க.விற்கு செல்வாக்கு அதிகரித்தது. வி.பி.சிங்குக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கி கொண்டது. அவருடைய ஆட்சி ஓர் ஆண்டைக் கூட நிறைவு செய்ய முடியாமல் கவிழ்ந்தது.
டைம்ஸ் நாளிதழின், 1990ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்கள் பட்டியலில், அத்வானி இருந்தார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பிறகு, அப்பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் என பா.ஜ.க. தீவிர இந்துத்துவ பாதையில் பயணிக்க தொடங்கியது. நானும் பா.ஜ.க.வை விட்டு எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தேன்.
சிறிதுகூட வரலாற்று அறிவோ, அரசியல் அறிவோ இல்லாதவர்கள், எதிர் கருத்து கொண்டவர்களை, தேச விரோதிகள் என சொல்வது நகைப்புக்குரியது.
சு.இரவிச்சந்திரன்

Tuesday, February 25, 2020

Daily Mystic Quote - Feb 25, 2020

It is the dream of every enlightened being that every human being and every other creature live in a consecrated space.

Quotes about life - Sadhguru looks at how we can produce a generation of beautiful people by ensuring that every human being lives within a consecrated space.