bluehost

Tuesday, January 29, 2008

தவம்

வாகனகங்கள் அவசரமாய்
விரைந்து செல்லும்;
காற்றில் இருள்
மெதுவாக பரவும்;
தெரு விளக்கு கம்பம்களில்
ஒளிப்"பூ" மெல்ல பூக்கும்;
மெல்லிய குளிர் காற்று
என்னை தீண்டி போகும்;
அவசரமாய் உலகம்
என்னை சுற்றி
இயங்கி கொண்டு இருக்கும்;
நான் மட்டும்
பேருந்து நிலைய சுவரில்
சாய்ந்துஒற்றை காலில்
தவம் இருப்பேன்
தேவதை அவள்
கடந்து போகும்
ஒற்றை வினாடிக்காக!

No comments: